tamilnadu

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணை

சென்னை, ஆக. 9- பகுஜன் சமாஜ் கட்சி  மாநில தலைவர் ஆம்ஸ்ட் ராங் கடந்த ஜூலை 5 அன்று சென்னை பெரம்பூரில் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் இதுவரை 22 பேர் கைது செய் யப்பட்டுள்ளனர். மேலும், 200 பேரிடம் விசாரணை நடத்தப் பட்டு உள்ளது.

இதனிடையே, இந்த வழ க்கு தொடர்பாக பாஜக வழக் கறிஞர் பிரிவு தலைவரான பால் கனகராஜ் ஆஜராகு மாறு சம்மன் அனுப்பப் பட்டது. இதையடுத்து, வெள் ளிக்கிழமை (ஆக.9) எழும் பூரில் உள்ள ரவுடிகள் ஒழிப்பு பிரிவு போலீஸ் அலுவல கத்தில் பால் கனகராஜ் ஆஜ ரானார். அவரிடம் பல்வேறு  கேள்விகளை கேட்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரான பால் கனக ராஜ் வடசென்னை மக்கள வைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டவர். பல் வேறு கொலை வழக்கு களில் கைதான ரவுடிகள் நாகேந்திரன், சம்போ செந்தில் உள்ளிட்டோருக்கு வழக்கறிஞராக பணியாற்றி யவர் என்பதால் இந்த விசா ரணை நடைபெற்றது.

பள்ளித் தாளாளர் கைது

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆம்ஸ்ட்ராங் குடும்பத் திற்கு மர்ம நபர் ஒருவர் கடிதம் மூலம் கொலை மிரட் டல் விடுத்தார். இதையடுத்து ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி, உறவினர்கள் வசிக்கும் அய னாவரம் அடுக்குமாடி குடி யிருப்பில் போலீஸ் பாது காப்பு போடப்பட்டது. இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர் பாக பள்ளித் தாளாளர் அருண்ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.