tamilnadu

img

தமிழர்கள் ரயில்வே பணிகளில் புறக்கணிக்கப்படுகிறார்களா? தெற்கு ரயில்வே விளக்கம்

தமிழர்கள் ரயில்வே பணிகளில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு அதிக அளவில் கூறப்பட்டு வந்தது. இது குறித்து தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

அந்த அறிக்கையில் கூறுகையில், கடந்த 2018 ஆம் ஆண்டு நடத்த பணியாளர்களுக்கான நியமன தேர்வில் தேர்ச்சி அடைந்த 541 பேருக்கு, திருச்சி பொன்மலை பணிமனையில் சான்றிதழ்களை சரிபார்ப்பு நடைபெற்றது. இதில்,40 பேர் மட்டம் தமிழர்கள் என தெரிந்ததால் ரயில்வே துறையில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும், பயிற்சி முடித்தவர்களுக்கு வேலை கேட்டு காத்திருக்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பணி நியமன ஆணையம் மூலமே அனைத்து ஊழியர்களும் தேர்வு செய்யப்படுகிறார்கள் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.