tamilnadu

img

பேராயர் எஸ்றா சற்குணம் மறைவு! சிபிஎம் இரங்கல்

பேராயர் எஸ்ரா சற்குணம் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கலை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அளித்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,

இந்திய சமூக நீதி இயக்கத்தின் தலைவரும், ஈசிஐ பேராயருமான எஸ்றா சற்குணம் (வயது 86) அவர்களின் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

பேராயர் எஸ்றா சற்குணம் சிறுபான்மை மக்களின் நலன்களுக்காகவும், உரிமைகளுக்காகவும் அயராது பாடுபட்டவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மத நல்லிணக்கம் வலியுறுத்தி நடத்திய பல்வேறு இயக்கங்களில் பங்கெடுத்தவர். அவரது மறைவு ஜனநாயக சக்திகளுக்கும், சிறுபான்மை மக்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.

அவரது மறைவால் துயருற்றுள்ள குடும்பத்தார், ஆதரவாளர்கள், உற்றார் உறவினர் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.