சென்னை, ஜூலை 20- சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ மனை மருத்துவ கல்லூரி விடுதி மாடியில் இருந்து குதித்து பயிற்சி மருத்துவர் தற்கொலை செய்து கொண்டார். திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையை சேர்ந்தவர் கண்ணன். சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் முழுவதும் இவர் இரவு நேரங்களில் அதிகமாக பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப் படுகிறது. இவர் திங்களன்று (ஜூலை 20) காலை மருத்துவமனை விடுதியின் 3வது மாடியில் இருந்து குறித்து தற்கொலை செய்து கொண்டார். இதில் பலத்த காயமடைந்த அவரை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பல னின்றி உயிரிழந்தார். கொரோனா தொற்று அதிகளவில் பரவி வருவதன் காரணமாக ஏராளமானோர் அரசு ஸ்டான்லி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதால் பணிச் சுமை அதிகமாக இருப்பதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்நிலையில் பயிற்சி மருத்துவர் உயிரிழந்திருப்பது மருத்துவர் கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற கண்ணன் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை என உறவினர்கள் புகார் கூறியுள்ளனர். கண் ணனின் விருப்பத்தின் படியே திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன என்று உறவி னர்கள் தெரிவித்துள்ளனர். ஸ்டான்லி மருத்து வமனைக்கு வந்து ஒரு மாதத்தில் தற்கொலை செய்தது சந்தேகமளிப்பதாக உறவினர் புகார் அளித்துள்ளனர்.