tamilnadu

img

மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச்செயலாளர் எஸ்.ராஜேந்திரனுக்கு பணிநிறைவு பாராட்டு விழா

சென்னை, செப். 15 - தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் வாரிய பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். இதனை யொட்டி அவருக்கு அமைப்பின் சென்னை கிளைகள் சார்பில் கடந்த வியாழனன்று (செப்.12) பாராட்டு விழா நடைபெற்றது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர் ராஜேஷ் லக்கானி பேசுகை யில், “மின் ஊழியர் மத்திய அமைப்பின் தலைவர் ஜெய்சங்கர், பொதுச்செய லாளர் ராஜேந்திரனும் என்னைச் சந்திக்க வரும்போது லோ வோல்டேஜ், ஹை வோல்டேஜாக வருவார்கள். சந்திப்பு முடிந்து செல்லும்போது இரு வரும் ஹைவோல்டேஜாக செல்வார்கள். 

அவர்களை டென்ஷன் செய்து அனுப்ப நினைத்தால், என்னை டென்ஷனாக்கி விட்டு செல்வார்கள். ஊழியர்களின் பிரச்சனைகள் மீது  அவ்வளவு அக்கறையோடு இருப்பார் கள். சட்டங்களை, வாரிய விதிகளை, ஒப்பந்தங்களை படித்துவிட்டு மிக நுணுக்கமாக ராஜேந்திரன் பேசுவார். 

நியாயமான பிரச்சனைகளுக்கு, ஊழியர் நலன் சார்ந்து மட்டுமே சந்திக்க வருவார்கள். பாதிக்கப்படும் ஊழியர் களின் துல்லியமான பட்டியலோடு வரு வார். இதனால் பல பிரச்சனைகளுக்கு விரைந்து தீர்வு காண முடிகிறது. மின் வாரியத்தில் பணியாற்றிய நாட்கள் மறக்க முடியாதது. ஓய்வு பெற்றாலும் ராஜேந்திரன் போராட்டத்தில் தான் இருக்கப் போகிறார். அவருக்கு வாழ்த்துக்கள்” என்றார்.

பொறுமையானவர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், “தொழிலாளர்களிடத்தில் அளவு கடந்த பொறுமையோடும், நிர்வாகத்திடம் ஹைவோல்டேஜாகவும் இருந்தவர் ராஜேந்திரன். தொழிற்சங்க இயக்கத்திற் கும், கட்சிக்கும் மகத்தான பல தலை வர்களை தந்தது மத்திய அமைப்பு. தொழிற்சங்கங்கள் புரட்சிக்கான பயிற்சிப் பள்ளிகள் என்று தோழர் லெனின் கூறுவார். எனவே மத்திய அமைப்பில் உள்ளவர்கள் தொழிற் சங்க, கட்சி பொறுப்புகளுக்கு வர வேண்டும்” என்று அழைப்பு விடுத் தார்.

மகிழ்ச்சியோடு...

சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்த ரராசன் பேசுகையில், “தன்னைத் துறந்து மக்கள் பணியாற்றும் பொறுப்பை ராஜேந்திரன் ஏற்க உள் ளார். அடுத்ததாக உலக தொழிற்சங்க சம்மேளனத்தின் (டபிள்யு.எப்.டி.யு)  பிரிவான ரசாயனம் மற்றும் எரிசக்திக் கான சர்வதேச தொழிற்சங்கத்தின் பொறுப்பாளராக செல்லவும் வாய்ப்பு  உள்ளது. அந்த பொறுப்போடு, தமிழ் நாட்டின் இதர உழைப்பாளிகளுக்காக அவர் கூடுதலாக உழைக்க வேண்டும். தொழிற்சங்கத்தில் மட்டுமல்ல, கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் பணி யாற்றுவார். அவரை மிகுந்த மகிழ்ச்சி யோடு வரவேற்கிறோம்” என்றார்.

போராளி

சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர்  பி.சம்பத் பேசுகையில், “சமரசம் செய்து கொள்ளாத போர்க்குணமிக்க மின் ஊழியர் மத்திய அமைப்பு உள்ளது. சவால்கள் நிறைந்த காலத்திலும், அர்ப்பணிப்பு மிக்க போராட்டத்தால் மத்திய அமைப்பு வளர்ந்துள்ளது. தொழிற்சங்கப் பணியை தீவிரமாக மேற்கொள்ள, ஆற்றல்மிக்க, கடுமை யான உழைப்பாளி, போராளியான எஸ்.ராஜேந்திரன் விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். ஓய்வூதியம், அக விலைப்படி கேள்விக்குறியாக்கப்பட்டு வருகிறது. இதை எதிர்த்து போரா டாமல் தொழிலாளி வர்க்கத்திற்கு முன்னேற்றம் இல்லை” என்றார்.

சிஐடியு மாநிலப் பொதுச்செய லாளர் ஜி.சுகுமாறன் கூறுகையில், “தவறை சுட்டிக் காட்டினால் அதை  உடனடியாக திருத்திக் கொள்ளக் கூடிய பண்புடையவர் ராஜேந்திரன். அரசுகள் செல்லும் பாதை கவலை தருகிறது. பொதுத்துறைகளை பாது காக்கும் போராட்டத்தை ஒன்றி ணைந்து நடத்த வேண்டி உள்ளது” என்றார்.

தொமுச பாராட்டு

தொமுச பொதுச்செயலாளர் மணி மாறன் பேசுகையில், “பேச்சுவார்த்தை, போராட்டங்களின் போது ராஜேந்திர னின் கருத்து தெளிவாக இருக்கும். அனைவரின் பார்வையும் அவரை நோக்கியே இருக்கும். மத்திய அமைப் பிற்கு  தலைமை தாங்கிய மிகப்பெரும் தலைவர்களுக்கு சற்றும் குறைவில்லா மல் சிறப்பாக பணியாற்றினார்” என்றார்.

நேர்மையாளர்

“அனைத்து தொழிற்சங்கங் களையும் ஒருங்கிணைத்து கூட்டு  இயக்கம் நடத்தும் மகத்தான பணியை ராஜேந்திரன் செய்தார். பன்முகத் தலைவராக, போராட்டங்களை தலைமை தாங்கி நடத்தும் ஒப்பற்ற தலைவராக செயல்பட்டார். நேர்மை யாக, திறமையாக பணியாற்றினார்” என்று எம்பிளாயீஸ் பெடரேஷன் பொதுச்செயலாளர் சேக்கிழாரும், “9  விழுக்காடு ஊதிய உயர்வு பெறுவதற்கு முக்கிய காரணம் மத்திய அமைப்பு தான். கூட்ட நடவடிக்கைக் குழுவிற்கு புத்துயிர் கொடுத்தவர் ராஜேந்திரன்” என்று அம்பேத்கர் சங்கத்தின் நிர்வாகி சாமியும் புகழ்ந்துரைத்தனர்.

மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலத் தலைவர் தி.ஜெய்சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் தலைவர் எஸ்.எஸ். சுப்பிரமணியம், மத்திய அமைப்பின் முன்னாள் பொருளாளர் வே.ராஜசேகரன், கே.அருள்செல்வன் (டிஎன்பிஇஏ), சம்பத் (பொறியாளர் அமைப்பு), சுப்பிரமணி (எச்எம்எஸ்), பாரி (ஜனதா தொழிற்சங்கம்), மூர்த்தி (பணியாளர் சம்மேளனம்), சேவியர் (ஐஎன்டியுசி), ரவி (என்எல்ஓ), மனோ கரன் (பொறியாளர் சங்கம்), ஜெயந்தி  (பொறியாளர் சங்கம்), கே.சுவாமி நாதன் (எல்ஐசி) உள்ளிட்டு மத்திய அமைப்பின் தலைவர்கள் பேசினர். மாநிலப் பொருளாளர் எம்.வெங்கடேசன் நன்றி கூறினார். முன்னதாக சென்னை மண்டலச் செய லாளர் ஏ.முருகானந்தம் வரவேற்றார்.