சென்னை,பிப்.17- நீதிபதிகள் நியமனம் முறையாக நடத்தப்படவில்லை என முன்னாள் நீதிபதி சந்துரு செய்தியாளர் சந்திப்பில் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசியதைக் குறிப்பிட்டுப் பேசிய அவர்;
கடந்த 5 ஆண்டுகளில் உயர்நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட நீதிபதிகளில் 79% பேர் உயர்சாதி வகுப்பைச் சேர்ந்தவர்கள் எனவும் உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றங்களில் வெறும் 2% பட்டியலின நீதிபதிகளில், 2% சிறுபான்மையினர் நீதிபதிகள் மட்டுமே இருக்கின்றனர், உயர்சாதியினரின் பெயர்கள் மட்டுமே அதிகளவில் பரிந்துரைக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
நீதிபதிகள் நியமனம் முறையாக நடக்கவில்லை எனவும் பெண்களுக்கு உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றங்களில் நீதிபதி பொறுப்புகள் வழங்குவது மிகவும் குறைவு எனவும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.