tamilnadu

சார் பதிவாளர் அலுவலகங்களில்லஞ்ச ஒழிப்பு துறை ‘ரெய்டு’

சென்னை:
திருவண்ணாமலை, திருப்பூர் மாவட்டங்களிலும், சென்னையிலும் பத்திரப் பதிவு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.ஆரணி பத்திரப்பதிவு அலுவலகத்தில் சோதனை நடத்தியபின் கணக்கில் வராத 40 ஆயிரம் ரூபாய் மற்றும் ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.திருப்பூர் மாவட்டம் அவிநாசி சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.16,500 பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இதுகுறித்து சார்பதிவாளர்கள் உதயகுமார், சத்தியமூர்த்தி ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.சென்னை நீலாங்கரையில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டவர்கள் ஆவணங்களையும் ரொக்கப் பணத்தையும் ஆவணங்களையும் பறிமுதல் செய்ததாக தகவல்கள் கூறுகின்றன.