சென்னை:
அண்ணா பல்கலைக் கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளதாக அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.தருமபுரியில் செய்தியாளர் களை சந்தித்த தமிழ்நாடு உயர் கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், “அண்ணா பல்கலைக் கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும்போது 69 விழுக்காடு இட ஒதுக்கீடு கேள்விக்குறியாகும் என தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “இட ஒதுக்கீட்டை பறி கொடுக்க முடியாது. சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு வரக்கூடும், கூடுதல் கட்டணம் வர வாய்ப்புள்ளது. இந்த நிலை வரக்கூடாது என்பதற்காக சிறப்பு அந்தஸ்து வேண் டாம் என அரசு நினைக்கிறது. ஐ.ஓ.இ மூலம் கிடைக்கக்கூடிய சலுகைகளை தமிழ்நாடு அரசே வழங்கும். உலகத்தரம் வாய்ந்த பல் கலைக் கழகமாக அண்ணா பல் கலைக்கழகம் திகழ்ந்து வருகிறது. புதிய கல்விக் கொள்கையில் 2035ஆம் ஆண்டுக்குள் உயர்கல்வி பயின்றவர்களின் எண்ணிக்கை 50 விழுக்காடாக இருக்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.ஆனால், தமிழ்நாட்டில் சென்ற ஆண்டே 49 விழுக்காடி எட்டி உள் ளது. இந்த ஆண்டு கணக்கீட்டின் படி 50 விழுக்காட்டை எட்டும்” என்றார்.