tamilnadu

img

அண்ணா நகர் கேந்திரிய வித்யாலயா பள்ளியின் 25ஆம் ஆண்டு விழா

அம்பத்தூர், ஏப். 27- அண்ணா நகரில் உள்ள  பிஎம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளியின் 25ஆம் ஆண்டு விழா வெள்ளியன்று (ஏப். 26)  நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் நிர்ம லேந்து கர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி ஆண்ட றிக்கையை சமர்ப்பித்தார்.

மத்திய பொதுப்பணித் துறை தலைமை பொறி யாளரும், வித்யாலயா பள்ளியின் கமிட்டி உறுப்பின ருமான ராஜேஷ் கரே, நிர்வாகப் பொறியாளர் எஸ்.தரணிதரன், 8ஆவது மண்டலக்குழு தலைவர் கூபி ஜெயின், மாமன்ற உறுப்பினர் செம்மொழி, ஆகியோர் பள்ளி மாணவர் களின் சாரண சாரணிய அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர்.

மேலும் கடந்த ஆண்டு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாண வர்களுக்கும், விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், சிறந்த ஆசிரியர்களுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தனர். மேலும் மாணவர்களின் நடனம், பாட்டு, நாடகம், இசை ஆகியவை அனை வரையும் வெகுவாக கவர்ந்தன. குறிப்பாக மாண வர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனை குறித்து மாண வர்கள் நாடக வடிவில் சிறப்பாக எடுத்துரைத்தனர். 

இந்த நிகழ்ச்சியில் திமுக அண்ணா நகர் வட்டச் செய லாளர் லோகுபாபு ஆசிரி யர்கள், மாணவர்கள், பெற் றோர் கலந்துகொண்டனர்.