tamilnadu

img

மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு.... முதல்வர் அறிவிப்பு....

சென்னை:
தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கை மேலும் ஒரு வார காலத்திற்குநீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு மே 28 வெள்ளியன்று வெளியிட்டுள்ள  அறிவிப்பு வருமாறு:

கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுப்பதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு குறிப்பிட்ட சில தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.ஏற்கனவே தமிழ்நாட்டில் அமலில் இருக்கும் தளர்வுகள் அற்ற ஊரடங்கு மே மாதம் 31ஆம் தேதி காலை 6 மணிக்குமுடிவுக்கு வரும் நிலையில், நோய்த்தொற்று தன்மையினை மாவட்ட வாரியாக ஆய்வு செய்தும் நோய்த்தொற்று பரவாமல் தடுத்து மக்களின் விலை மதிப்பற்ற உயிர்களை காக்கும் நோக்கத்திலும் இந்த முழு ஊரடங்கு ஜூன் மாதம் 7 ஆம் தேதி காலை 6 மணி வரை மேலும் ஒரு வாரகாலத்திற்கு நீட்டிப்பு செய்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

எனினும் பொதுமக்கள் அத்தியாவசிய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறையில் இருந்துவரும் நடமாடும் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனைதொடர்புடைய துறைகள் மூலம் தொடர்ந்து நடைபெறும்.மேலும் மளிகைப் பொருட்களை அந்தந்த பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகளால் வாகனங்கள் அல்லது தள்ளுவண்டிகள் மூலம் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று விற்பனை செய்யவும் ஆன்லைன் மற்றும் தொலைபேசி வாயிலாக வாடிக்கையாளர்கள் கோரும் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கவும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதிக்கப்படுகிறது.

மலிவு விலையில் மளிகைப் பொருட்கள்
இதுதவிர பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் 13  மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம்வரும் ஜூன் மாதம் முதல் வழங்கிட, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறைக்கு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த பொதுமக்களின் நலன் கருதி தமிழ்நாட்டில்முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அவசியமின்றி வீட்டில் இருந்து வெளியில் வருவதையும் கூட்டங்களையும் தவிர்க்க வேண்டும்என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

;