tamilnadu

img

‘ஆனந்த ராகம்’ அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார்

சென்னை, மே 2- தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி  உமா ரமணன் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 69. சென்னை அடையாறு பகுதியில் வசித்து  வந்த உமா ரமணன் கடந்த சில மாதங்களாக  உடல்நல பிரச்சனையால் அவதிப்பட்டு அதற்  கான சிகிச்சை எடுத்து வந்தார்.

இந்நிலை யில் அவரது இல்லத்திலேயே புதன்கிழமை (மே 1) இரவு காலமானார். இசைக்கலைஞர் ஏ.வி. ரமணனின் இசைக்குழுவில் பாடி வந்த உமா, பின்னர் ரம ணனையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். 1978-இல் ‘கிருஷ்ணலீலை’ படத்  தில் இடம் பெற்ற ‘மோகனக்கண்ணன்’ என்ற  பாடல் மூலம் சினிமாவில் பாடகியாக அறிமுக மானார்.

அதைத்தொடர்ந்து, எம்.எஸ்.விஸ்வ நாதன், இளையராஜா, வித்யாசாகர் உள் ளிட்டோர் இசையில் அதிக பாடல்கள் பாடி னார். குறிப்பாக, ‘நிழல்கள்’ படத்தில் ‘பூங்க தவே தாழ் திறவாய்..’ பாடல் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான உமா, ‘பன்னீர் புஷ்பங்கள்’ திரைப்படத்தில் ‘ஆனந்த ராகம்...’, ‘தூறல் நின்னு போச்சு’ படத்தில் ‘பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்..’, ‘மெல்லப் பேசுங்கள்’ படத்  தில் ‘பூங்கதவே தாழ்திறவாய்..” ‘தென்றலே  என்னைத் தொடு’ படத்தில் வரும் ‘கண்மணி  நீ வரக் காத்திருந்தேன்..’, ‘புதுமைப்பெண்’ படத்தில் ‘கஸ்தூரி மானே கல்யாணத் தேனே..’, பின்னாட்களில், ‘பாண்டிய நாட்டு  தங்கத்’தில் ‘ஏலேலம் குயிலே..’, ‘கும்பக் கரை தங்கையா’ படத்தில் ‘பூத்து பூத்து குலுங்குதடி பூவு..’, ‘அரங்கேற்ற வேளை’ படத்தில் ‘ஆகாய வெண்ணிலாவே.. தரை மீது வந்ததேனோ..?’ போன்ற பாடல்கள் மூலம் இசை ரசிகர்களைக் கட்டிப்போட்டவர். திருப்பாச்சி படத்தில் வரும் ‘கண்ணும் கண்ணும்தான் கலந்தாச்சு..’ என்ற பாடல் மூலம் இளம்தலைமுறை ரசிகர்களையும் கவர்ந்தார்.

உமா ரமணன் மறைவு இசை ரசிகர்கள்  மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள் ளது. அவரது மறைவுக்கு இசை ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.