வேலூர்,செப்.20- வேலூர் மாவட்ட நூலக அலுவலரின் மாற்றுத்திறனாளி ஊழியர்களிடமும், நூலக பணியாளர்களிடமும் ஊழியர் விரோத போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் மற்றும் அரசு பொதுநூலக மாற்றுத் திறனாளிகள் ஊழியர் மாநில சங்கம் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில், அரசு பொதுநூலக மாற்றுத்திறனாளிகள் ஊழி யர் மாநில சங்கம் மாநில செயலாளர் பி.சரவ ணன் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப் பாளர்கள் கோபாலராஜேந்திரன், எஸ்.டி.சங் கரி, மாநில பொருளாளர் என்.நாகராஜன், மற் றும் காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் திருவள்ளூர் மாவட்ட சங்க மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் இதில் பங்கேற்றனர்.