சென்னை, மே 17- முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளில் அனைத்து சத்து ணவு, குழந்தைகள் மையங் களில் இனிப்புப் பொங்கல் வழங்கப்பட உள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை யில், சத்துணவு, குழந்தை கள் மையங்களில் பயன டைந்து வரும் மாணவர் களுக்கு நாள்தோறும் சத்துணவிற்காக அனுமதிக்கப்பட்டுள்ள அரிசியின் அளவில் அரிசி பயன்படுத்தவும், இனிப்புப் பொங்கல் வழங்க தேவைப்படும் வெல்லம் மற்றம் இதர பொருட்களை இனிப்புப் பொங்கல் வழங்கப்படும் நாளின் உணவூட்டுச் செலவினத் திற்குள் (எரிபொருள் நீங்கலாக) வாங்குவதற்கு அனுமதி அளித்தும் அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி பிறந்த நாளான 3.6.2023 அன்று தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சத்துணவு, குழந்தைகள் மையங்களி லும் இத்திட்டம் செயல் படுத்தப்படும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.