tamilnadu

img

ஓய்வுபெறும் நாளிலேயே அனைத்து பணப்பலன்களையும் வழங்கவேண்டும் போக்குவரத்து ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை, பிப்.18- அரசு ஓய்வூதியருக்கு வழங்கப்படும் மருத்துவக்காப்பீட்டு உள்ளிட்ட அனைத்து  சலுகைகளும் வழங்க கோரி அரசு போக்கு வரத்து கழங்கங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றோர் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழி யர்நல சங்கத்தின் சார்பில் இந்த ஆர்ப்பாட் டம்  அண்ணாசாலை பல்லவன் இல்லம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 2015 முதல் உயர்ந்துள்ள பஞ்சப்படி மற்றும் 50 மாத நிலுவைத்தொகை வழங்க வேண்டும், 2016 செப்டம்பர் முதல் 2017 டிசம்பர் வரை மற்றும் 2019 ஏப்ரல் முதல் இன்று வரை உள்ள கிராஜியுடி, கமுடேசன், விடுப்பு சம்பள நிலுவை வழங்கவேண்டும் என இதில் வலியுறுத்தப்பட்டது. நலச்சங்க தலைவர் நீலமேகம் தலைமை  தாங்கினார். மாநிலத்தலைவர் ஏ.ரைமண்ட், செயலாளர்  கே.கர்சன், பொருளாளர் ஏ.வரத ராஜன், மாவட்ட துணைத்தலைவர் முரு கேசன், பொருளாளர் முத்துகுமார், சண்முகம் (அரசுபோக்குவரத்துசங்கம்)ஆகியோர் பங்கேற்று பேசினர்.