ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய தொழிலாளர்களுக்கு 7 ஆயிரத்து 500 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும், 100 நாள் வேலை வழங்க வேண் டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாயன்று (மே 12) அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வானூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் விழுப்பு ரம் மாவட்டத் தலைவர் வி.அர்ச்சுணன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி, ஆறுமுகம் உள்ளிட்டோர் பேசினர். இதனையடுத்து தலைவர்களிடம் மனுவை பெற்றுக் கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர், மே14 முதல் வேலை வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.