tamilnadu

img

சென்னை - யாழ் இடையே விமான சேவை

சென்னை, ஆக.2- சென்னையில் இருந்து யாழ்ப்பா ணத்திற்கு தினசரி விமான சேவையை தொடங்கியுள்ளதாக இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது. 

வரும் செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல், சென்னை, யாழ்ப்பாணம் இடையே தினசரி விமான சேவை தொடங்கப்பட உள்ளது. கொழும்பு நகரத்திற்கு ஏற்கனவே விமானத்தை இயக்கி வரும் இண்டிகோ நிறுவனம், வேறொரு நகரத்திற்கு விமானத்தை இயக்க திட்டமிட்டு வந்தது. அந்த வகையில், விமான சேவைக்கு இரண்டாவது நகரமாக யாழ்ப்பாணம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, யாழ்ப்பாணம் செல்ல  இந்தியர்கள் அதிக ஆர்வம் காட்டி  வருகின்றனர். இதுகுறித்து இண்டிகோ  நிறுவனத்தின் உலகளாவிய விற்பனை பிரிவு தலைவர் வினய் மல்ஹோத்ரா கூறுகையில் “ இலங்கை - இந்தியா இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதில் புதிய விமான சேவை முக்கிய பங்கு வகிக்கும் என்றார்.

75 நிமிடத்தில் இந்த விமானம் சென்றடையும். இந்திய இலங்கைக்கு இடையேயான பயண நேரத்தை கணிசமாகக் குறைக்கும். மேலும், இலங்கையின் யாழ்ப்பாணத்தை இன்னும் அணுகக்கூடியதாக மாற்றும். எங்கள் வாடிக்கை யாளர்களுக்கு சிறந்த இணைப்பு மற்றும் மேம்பட்ட அணுபவங் களை வழங்குவதில் நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்” என்றார்.

சென்னை - யாழ்ப்பாணம் விமான சேவைக்கான முன்பதிவு விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு செல்லும் சுற்றுலாவாசிகளின் எண்ணிக்கையில் பெரும் பங்கு இந்தியர்களாக உள்ளனர். கடந்த ஜூன் மாதம் மட்டும், 28,631 இந்தியர்கள் இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இது மொத்த சுற்றலாவாசிகளின் எண்ணிக்கையில் 25.2 சதவிகிதமாகும். கடந்தாண்டு ஜூன் மாதம், இலங்கைக்கு 26,830 இந்தியர்கள் சுற்றுலா சென்றுள்ளனர்.இந்த எண்ணிக்கை மொத்த சுற்றுலாவாசிகளில் 26.7 விழுக்காடாகும்.