tamilnadu

img

கொட்டும் மழையிலும் விவசாயத் தொழிலாளர்கள் பேரணி

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையின் நிலுவைத் தொகையை வழங்குதல், பிஎம் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கூரை இல்லாத ஒவ்வொரு குடும்பத்தையும் சேர்க்க வேண்டும், ஸ்மார்ட் மீட்டர்களை ரத்து செய்ய வேண்டும் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ரூ.6000 உதவித்தொகை வழங்க வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்குவங்க மாநிலம் மால்டா நகரில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க ஊழியர்கள், பொதுமக்கள் கொட்டும் மழைக்கு இடையே நடைபெற்ற பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சூர்யகாந்த மிஸ்ரா, மத்தியக்குழு உறுப்பினர் அமியா பத்ரா மற்றும் நிரபதா சர்தார், துஷார் கோஷ், அம்பர் மித்ரா உட்பட பலர் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினர்.