tamilnadu

டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக டிச.9-இல் தனித் தீர்மானம்! சட்டமன்றத்தில் முதல்வர் கொண்டு வருகிறார்

சென்னை, டிச. 2 - மதுரை அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைப்பதை எதிர்த்து சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வருகிறார். இத்தகவலை சட்டப்பேரவைத் தலை வர் மு. அப்பாவு தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 9 அன்று தமிழக சட்டப்பேர வைக் கூட்டத் தொடர் துவங்கும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு ஏற்கெனவே அறிவித்து இருந்தார். இந்நிலையில், திங்களன்று (டிச. 2) அலுவல் ஆய்வுக் கூட்டம் நடை பெற்றது.

இக்கூட்டத்திற்குப் பின், பேர வைத் தலைவர் அப்பாவு செய்தி யாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, “அலுவல் ஆய்வுக் குழுக்  கூட்டம், சட்டப்பேரவைத் தலைவர் அறையில் நடைபெற்றது. அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய இரண்டு தினங்கள் சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெறும் என ஏகமன தாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில், முதல் நாளான டிசம்பர் 9 அன்று, கூடுதல் செலவினங்களுக்கான மானியக் கோரிக்கையினை தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யவிருக்கிறார். அன்றைய தினம், மாநில அரசின் அனுமதி பெறாமல், மதுரை மாவட்டத்தில் ஒன்றிய அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ள டங்ஸ்டன் கனிமச் சுரங்கத்துக்கான உரிமையை ரத்து செய்வது குறித்த அரசின் தனித் தீர்மானத்தை தமிழக முதல்வர் சட்ட மன்றத்தில் கொண்டு வருகிறார். இரண்டாவது நாளான டிசம்பர் 10-ஆம் தேதியன்று, விவாதங்கள் நடை பெற்று பல்வேறு மசோதாக்கள் நிறை வேற்றப்படும். இரண்டு நாட்களிலும் கேள்வி நேரம் உண்டு.”  இவ்வாறு சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.