tamilnadu

உலகச் செய்திகள்

சர்வதேச அமைப்புகள் மற்றும் அவற்றின் கூட்டங்கள் நடக்கும்போது ஆப்பிரிக்க நாடுகள் அனைத்தும் ஒரே குரலில் பேச வேண்டும் என்று அல்ஜீரியா வலியுறுத்தியுள்ளது. சில நாடுகள் தங்கள் கருத்துக்கு வலு சேர்ப்பதற்காக ஆப்பிரிக்க நாடுகள் சிலவற்றை தங்களுக்குச் சாதகமாக பேச வைக்கின்றன என்றும், அத்தகைய போக்குகள் ஆப்பிரிக்காவுக்கு இழப்பாகவே இருப்பதாகவும் அல்ஜீரியாவின் வெளி யுறவுத்துறை அமைச்சர் லமாம்ரா கூறியுள்ளார்.

அரசுக்குச் சொந்தமான ஒரு தடுப்பூசி ஆய்வு நிறுவனத்தைத் துவங்குவதற்கு பின்லாந்து அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. 51 சதவிகிதப் பங்குகள் அரசின் வசம் இருக்கும். நிறுவனத்தின் மேலாண்மையும் அரசின் பொறுப்பில்தான் இருக்கும். எஞ்சியுள்ள 49 சத விகிதப் பங்குகள் பின்லாந்தின் இரண்டாவது பெரிய பல்கலைக்கழகமான டாம்பெரேயின் வசம் இருக்கும். ஏற்கனவே இருக்கும் இரண்டு தடுப்பூசி ஆய்வு நிறு வனங்களை இணைத்து புதிய நிறுவனம் உருவாக்கப் படுகிறது.

நாடு கடந்து அகதிகளாகவும், அடைக்கலம் தேடியும் வரும் மக்களை ஒழுங்குபடுத்தும் வகை யில் பிரான்சின் கடலோரப் பகுதிகளில் கூட்டாக ரோந்துப் பணிகளில் ஈடுபடலாம் என்று பிரிட்டட்ன தெரி வித்த ஆலோசனையை பிரான்ஸ் நிராகரித்துவிட்டது. சிறிய படகுகளில் ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயல் கையில் கடந்த வாரத்தில் 27 பேர் மூழ்கிய சம்பவத்தை  அடுத்தே இந்த ஆலோசனை முன்வைக்கப்பட்டது.