சென்னை, டிச. 17- சென்னையில் மிக்ஜம் புயல் வெள்ளம் ஏற்பட்டபோது, எண்ணூரில் எண்ணெய் கழிவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தி யது. தற்போது இதற்கு ரூ.12,500 நிவார ணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் டிசம்பர் மாத தொடக் கத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல் பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங் களை மிக்ஜம் புயல் தாக்கியது.
இதனால் 4 மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு ரூ.6 ஆயிரம் நிவாரணம் அறிவித்தது. இதற்கிடையில் சென்னை எண்ணூரில் உள்ள பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து எண்ணெய் கசிந்தது. இந்த எண்ணெய் கசிவுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினார்கள். தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்கள்.
இந்நிலையில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்குக் கூடுதலாக தலா 12,500 ரூபாய், படகுகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, 12,500 ரூபாய் வழங்க கணக்கெடுக்கும் பணிகள் முடிந்துவிட்டன எனக் கூறப்படுகிறது. விரைவில் எண்ணெய் கசிவால் பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.12,500 வழங்க ப்பட உள்ளது.
அதாவது, எண்ணெய் கசிவால் பாதிக்க ப்பட்ட 22 மீனவ கிராமங்களைச் சேர்ந்த 2,300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மற்றும் 700 படகுகளுக்கு நிவாரணம் வழங்கப்பட உள்ளது. இந்தத் தகவலை சிறப்பு அதிகாரி கந்தசாமி தெரிவித்துள்ளார்.