சென்னை, பிப். 28- எண்ணூர் எண்ணெய் கசிவால் பாதிக் கப்பட்டு மீட்கப்பட்ட பறவைகள் மார்ச் மாதம் காடுகளில் விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த டிசம்பரில் பெய்த தொடர் மழை யின் போது எண்ணூரில் எண்ணெய் கசிவு ஏற்பட்டது.
இதனால் அங்குள்ள நீர் நிலை கள் மற்றும் கடல் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டது. இதில் பறவைகள் மீதும் எண்ணெய் படலம் அதிகமாக இருந்தது, குறிப்பாக பெலிகன், கொக்கு ஆகிய பறவை களின் கழுத்தில் அதிகமாக எண்ணெய் இருந்தது. இதில் பல பறவைகள் இறந்தன.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பறவைகள் மீட்கப்பட்டு கிண்டி சிறுவர் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பறவைகளுக்கு கடுமையாக நீரிழப்பு, சோர்வு உண்டானது. மேலும் உணவை விழுங்க முடியாமல் பறவைகள் வாந்தி எடுத்தன. மேலும் அவற்றின் இறகுகள் கெட்டியாக்கப்பட்டு பறக்க முடியாமல் அவதியடைந்தன.
இதையடுத்து சோப்பு உள்ளிட்ட திரவங்களை கொண்டு அவை சுத்தம் செய்யப்பட்டன. மீட்கப்பட்ட பறவைகளின் சராசரி எடை சுமார் 3.8 கிலோவாக இருந்தது. தற்போது அவை முறையாக பராமரிக்கப்பட்டு 4.5 முதல் 5 கிலோ வரை எடை கூடியுள்ளது. எனவே அவற்றை சுதந்திரமாக பறக்க அனு மதிக்கும் வகையில் 1,118 சதுர அடி பரப்பள வுள்ள பெரிய நிலப்பரப்புக்கு மாற்றம் செய்ய ப்பட்டுள்ளது. மேலும் ஒரு தற்காலிக குளம் உருவாக்கப்பட்டு உயிருள்ள மீன்கள் அதில் விடப்பட்டுள்ளது.
கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். தற்போது அந்த பறவைகள் நல மாக இருக்கின்றன. மீண்டும் அவை பரி சோதனை செய்யப்பட்டு மார்ச் மாதம் காட்டுக் குள் விடப்படும் என வனத்துறை அதிகாரி கள் தெரிவித்தனர்.