tamilnadu

img

மாற்றுத்திறனாளிகளுக்கு விரோதமாக செயல்படுகிறது அதிமுக அரசு.... மாநிலம் முழுவதும் மாற்றுத் திறனாளிகள் போராட்டம்....

சென்னை:
அதிமுக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு விரோதமாக செயல்படுகிறது என்று மாற்றுத்திறனாளிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதஉதவித் தொகையை ரூ. 3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் .கடும் ஊனமுற்றோருக்கு ரூ.5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். ஊனமுற்றோர் உரிமைகள் சட்டப்படி தனியார் துறைகளிலும் குறைந்தபட்சம் 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழக அரசுத்துறைகளில் பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்பியது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகைமாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங் கத்தின் தலைமையில் நவம்பர் 17 செவ்வாயன்று தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்தியசென்னை மாவட்டம் சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் தலைவர் பா.ஜான்சிராணி, மாவட்ட நிர்வாகிகள் எஸ்.மனோன்மணி, த.சுரேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் திருச்சிற்றம்பலம் கூட்டு சாலையில் வட்டச் செயலாளர் ஏ.வேணுகோபால் தலைமையில் ஆர்ப்பாட்டம்நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் எஸ்.நம்புராஜன் பேசுகையில், புதுச்சேரி, தெலுங்கானா ஆகியமாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்குவது போல் உதவித்தொகையை குறைந்தபட்சம் 3 ஆயிரம் ரூபாயாக வழங்க வேண்டும். ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம்- 2016 இன்படி தனியார் துறையில் வேலை வாய்ப்பில் 5 சதவீத இட ஒதுக்கீட்டை அரசு உத்தரவாதப்படுத்த சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் நீதிமன்றத்தை அவமதிப்பு செய்வதோடு,அதிமுக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு விரோதமாக செயல்படுகிறது. கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.இல்லையெனில் டிசம்பர் 2 ஆம் தேதி மறியல்போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.