tamilnadu

img

ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கில் சிக்கும் நடிகர்

ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் நடிகரும், பாஜக பிரமுகருமான ஆர்.கே.சுரேஷை விசாரிக்க பொருளாதார  குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.
 சென்னை அமைந்தகரையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வந்தது ஆருத்ரா கோல்டு நிறுவனம். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக அரிவித்து வாடிக்கையாளர்களிடமிருந்து ரூ.2438 கோடி மோசடி செய்தது.
அந்நிறுவனத்தின் இயக்குனரும், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகியுமான ஹரீஷ் மற்றும் மற்றொரு இயக்குனரான மாலதி ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடந்த வாரம் கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர். அதேநேரத்தில், இந்த வழக்கில் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான ரூசோ என்பவரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், நடிகரும் பாஜக கலைப் பிரிவு மாநில நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷ் என்பவரிடம் வழக்கை ஒன்றிய அரசின் மூலம் ஒன்றும் இல்லாமல் செய்வதற்காக ரூ.12 கோடி கொடுத்துள்ளார் என்பதும் அதை வாங்கிகொண்டு ஏமாற்றி விட்டதாகவும் கூறியுள்ளார். இதனடிப்படையில் வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்ட ஆர்.கே.சுரேஷை தமிழ்நாட்டிற்க்கு அழைத்து வந்து விசாரிக்க போவதாக பொருளாதார குர்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.இந்த விவகாரத்தில் பல பாஜக நிர்வாகிகள் சிக்கியிருப்பது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது