பணி நிறைவு பாராட்டு
டிஆர்இயூ செயல் தலைவர் அ.ஜானகிராமன் ரயில்வே துறையில் பணியாற்றி கடந்த மாதம் ஓய்வு பெற்றார். அவருக்கு பாராட்டு விழா சென்னை எம்.எம்.சி. வளாகத்தில் கே.சீனிவாசன் தலைமையில் புதனன்று (ஏப். 16) நடைபெற்றது. இதில் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், டிஆர்இயூ பொதுச்செயலாளர் வி.அரிலால், துணைத் தலைவர் பேபி ஷகிலா, இணைச்செயலாளர் ஏ.வெங்கட்ராமன், உதவி பொதுச்செயலாளர் எஸ்.அருண்குமார் செழியன், நிர்வாகிகள் எஸ்.சந்திரசேகர், எஸ்,சிவாஜி, ஜி.ஜோதி, எம்.இளையராஜா, தட்சிண ரயில்வே பென்ஷனர்ஸ் யூனியன் தலைவர் ஆர்.இளங்கோவன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.