சென்னை, மே 12- தமிழ்நாட்டின் முதலமைச்ச ராக மு.க.ஸ்டாலின் பொறுப் பேற்ற பிறகு, கடந்த மூன்று ஆண்டுகளில் 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி தரப்பட் டுள்ளதாக அரசு வெளியிட்டிருக் கும் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது
அறிக்கையின் முக்கிய அம் சங்கள் வருமாறு:
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புத் திட் டத்தில் சமூகத்தில் பொருளா தார ரீதியாகப் பின்தங்கியுள்ள மக் களுக்கு வீடுகளைத் தாமதமின்றி வழங்கி வருகிறார்கள்.
அடுக்குமாடி குடியிருப்புகள்
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் 92 திட்டப் பகுதிகளில் ரூ.3,197.94 கோடியில் கட்டப்பட்ட 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள் திறந்து வைக்கப்பட்டு வீடற்ற ஏழை எளிய மக்கள் மற்றும் குடி சைப் பகுதிகளில் வாழும் மக்க ளின் பயன்பாட்டிற்காக வழங்கப் பட்டுள்ளன.
இந்த அரசு பொறுப்பேற்றதி லிருந்து இதுவரை, 37,720 அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகள் பயனாளி களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும் 3,023 அடுக்குமாடி குடி யிருப்புகளுக்கான விற்பனை பத்திரங்கள் மற்றும் 1,733 மேம் படுத்தப்பட்ட மனைகளுக்கும் விற்பனை பத்திரங்கள் வழங் கப்பட்டுள்ளன.
தாமாக வீடு கட்டும் திட்டம்
மக்கள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மூன்றாண்டு களில், 1,68,495 வீடுகள் கட்டி முடிக் கப்பட்டுள்ளன. 89,429 பயனாளி களுக்குப் பணி ஆணைகள் வழங் கப்பட்டுப் பணிகள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன. மேலும், மக்கள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ. 2,078.37 கோடி திட்டமதிப்பீட்டில் 69,701 புதிய தனி வீடுகள் கட்டு வதற்கு அரசின் ஒப்புதல் பெறப் பட்டுள்ளது.
மறுகட்டுமானம்
சிதிலமடைந்த அடுக்குமாடி குடியிருப்புகள் மறுகட்டுமானம் செய்யும் திட்டத்தின் ஒரு பகுதி யாக 17 திட்டப் பகுதிகளில் உள்ள 7,582 சிதிலமடைந்த அடுக்கு மாடி குடியிருப்புகளை இடித்து விட்டு மீண்டும் அதே இடத்தில் ரூ. 1,608.88 கோடி மதிப்பீட்டில் 9,522 புதிய அடுக்குமாடி குடியிருப்பு கள் கட்டும் திட்டத்திற்கான பணி கள் நடைபெற்று வருகின்றன.
பழுது நீக்கம், புதுப்பித்தல்
ஏற்கனவே கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டமைப்பு உறுதித்தன்மை மற்றும் ஆயுட்காலத்தினை அதி கரிக்க ரூ.59.80 கோடி செல வில் பழுது நீக்குதல் மற்றும் புதுப் பித்தல் பணிகள் மேற்கொள்ள 117 திட்டப் பகுதிகளில் 76,434 அடுக்குமாடி குடியிருப்புகளுக் கான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
புனரமைப்புப் பணிகள்
சென்னை மற்றும் இதர நக ரங்களில் 79 திட்டப் பகுதிகளில் உள்ள 31,239 அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்குக் கட்ட மைப்பு வசதிகளை ரூ.82.57 கோடி செலவில் மேம்படுத்த இறுதி செய்யப்பட்டுப் பணிகள் முன் னேற்றத்தில் உள்ளன.
சமுதாய மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாகவும், நகர்ப்புற மக்களின் திறன்களை மேம்படுத்தும் வகையிலும் பல் வேறு இனங்களில் 4,771 பேருக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
ஏழை எளிய மக்களின் வீட் டிற்கான கனவை நிறைவேற்றி அனுதினமும் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக முன் னேற்றப் பாதையில் வழிநடத்திச் செல்லும் முதலமைச்சருக்கு ஏழை எளிய மக்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அரசு வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.