tamilnadu

img

ஓசூரில் திறந்து கிடக்கும் தொட்டிகளால் தினசரி விபத்து

கிருஷ்ணகிரி, ஜூலை 8- ஓசூர் நகராட்சி மாநக ராட்சியாக அறிவிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்தும் நகராட்சி அளவிற்கும் கீழ்நிலையிலேயே உள்ளது. பல தெருக்கள் இன்னும் விரிவுபடுத்தப்படாமல் குறுக லாகவே உள்ளன. இருக்கும்  10 அடி தார்ச் சாலைகளை யும் தொலை தொடர்புத் துறை, குடிநீர் வாரியம் என  சாலைகளை தோண்டி பணி  செய்கின்றனர். பணி முடிந்த வுடன் சாலைகளை மீண்டும் சீரமைப்பதில்லை. இதனால் சாலைகள் குண்டும் குழியு மாக மாறிவிடுகிறது. இத னால் வாகன ஓட்டிகள் கடும்  அவதிப்படுகின்றனர்.  குடிநீர் வாரியம் சார்பில்  பல இடங்களில் கட்டப்பட்ட தொட்டிகள் மூடப்படாமல் உள்ளன. நவதி சாலையில்  திறந்து கிடந்த தொட்டியில்  இரு சக்கர வாகனத்தில் வந்த வர் விழுந்துள்ளார். சைக்கி ளில் வந்த மாணவர்கள் விழுந்துள்ளனர். அந்த வழி யாக வந்த தனியார் பள்ளிப் பேருந்தின்  சக்கரம் அந்த தொட்டிக்குள் மாட்டிக் கொண்டது. பேருந்து மெது வாக வந்ததால் மாணவர்க ளுக்கும், ஆசிரியர்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லை.  விபத்து நடந்து 20 நாட்க ளுக்கு மேலாகியும் இன்னும்  அந்தத் தொட்டி மூடப்படா மல் உள்ளது. இதேபோல் மிடுகரப் பள்ளி சாலை முகப்பிலும் ஒரு தொட்டி மூடப்படாமல் திறந்தே கிடக்கிறது. இப் பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லுரிக்கு தினசரி  வாகனங்களில் மாணவர்கள் வந்து செல்கின்றனர். மேலும்  இந்த சாலையில் மினி பேருந்து, லாரி, தனியார் கல்  லூரி பேருந்துகள் சென்று  வரும் போக்குவரத்து நெரி சல் மிகுந்த சாலையாகும். மூடப்படாமல் திறந்தே கிடக்கும் தொட்டிகளை உட னடியாக தரமான உறுதி யான சிமெண்ட் பலகைக ளால் மூட வேண்டும், தோண்  டிய குண்டும் குழியுமான சாலையை சீரமைத்து, விரிவு படுத்த வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.