திருவண்ணாமலை, ஜூலை 31- திருவண்ணாமலை மாவட்டம் கலச பாக்கம் அடுத்த கங்கவரம் பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தில், 3 லட்ச ரூபாய்க்கு மேல் நடைபெற்றுள்ள முறைகேட்டில் ஈடுபட்ட வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அகில் இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் கலசபாக்கம் பிடிஓ அலுவல கம் முன்பு கிளைச் செயலாளர் நடராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து அதிகாரி கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் முறை கேட்டில் ஈடுபட்ட 9 பேரையும் பணி நீக்கம் செய்வதாகவும், முறைகேடாக எடுக்கப்பட்ட பணத்தை மீட்க, உரிய நடவடிக்கை எடுப்ப தாகவும் உறுதியளித்தனர். இதில் மாவட்டச் செயலாளர் எம்.பிரகல நாதன், நிர்வாகிகள் கே.கே.வெங்கடேசன், வி. சுப்பிரமணி, சுந்தர், முருகன், சர்தார், மாணிக் கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.