சென்னை, மார்ச் 17 - அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பில் சனிக்கிழமையன்று (மார்ச்16) சைதாப்பேட்டை யில் சர்வதேச மகளிர் தின பொதுக்கூட்டம் நடை பெற்றது.
இந்நிகழ்விற்கு தலைமை தாங்கி பேசிய அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய செயலாளர் பி. சுகந்தி, மோடி தலைமையி லான பாஜக ஆட்சியின் வெறுப்பு அரசியலால் மிகக் கடுமையாக பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். சமத்துவத்திற்கும், ஜன நாயகத்திற்கும் எதிராக ஒன்றிய பாஜக அரசு உள்ளது.
2022 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கையில், 4 லட்சத்து 45 ஆயிரத்து 256 குற்றங்கள் பெண்களுக்கு எதிராக பதிவாகியிருக்கிறது. அதில் 65 ஆயிரத்து 743 குற்றங்கள் பாஜக ஆளும் உத்திரபிரதேசத்தில் மட்டும் நிகழ்ந்துள்ளதை சுட்டிக் காட்டிய சுகந்தி,
குழந்தைகள், தலித்துகள், பழங்குடிகளுக்கு எதி ராக அதிகளவு குற்றங்கள் பதிவாகும் மாநிலங்களாக பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களே உள்ளன என்றார்.
மணிப்பூரில் பழங்குடியினப் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வல மாக இழுத்து சென்று பாலி யல் வன்புணர்வு செய்தது, மல்யுத்த வீராங்கனைகள் மாதக்கணக்கில் போராடி வருவது போன்றவற்றை சுட்டிக்காட்டிய அவர், பாசிச மநுவாதிகளான பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராமல் நாடாளுமன்ற தேர்தலில் வீழ்த்துவோம் என்றார்.
கோரிக்கை சாசனம்
இந்த நிகழ்வில் தேர்தல் கோரிக்கை சாசனம் -2024ஐ இந்திய மாதர் தேசிய சம்மேளன தலைவர் ஜி.மஞ்சுளா வெளியிட, மாநில மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எஸ்.குமரி பெற்றுக் கொண்டார்.
அப்போது பேசிய ஏ.எஸ்.குமரி, “தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளாக பெண்களுக்கு எதிராக நிகழும் குற்றங்களைத் தடுக்க பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். பெண்களோடு களத்தில் நின்று செயல்படும் அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்க தலை வர்கள் உ.வாசுகி, பி.சுகந்தி போன்றோரிடம் அவ்வப்போது அதற்கான ஆலோசனைகளை பெறுகிறோம். பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் சைபர் குற்றங்களை தடுக்க 1930 என்கிற தொடர்பு எண்ணை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது. அதனை இளம்பெண்களிடம் அதிகள வில் கொண்டு செல்ல வேண்டும்” என்றார்.
பேரா.கல்பனா
பேரா.கல்பனா குறிப்பிடு கையில், பாஜக ஆட்சி யில் பெண்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரங்களை எடுத்துக்காட்டி, அவை எப்படி பிளவுவாத வெறுப்பு அரசியலை அதி கரித்துள்ளது என்பதை விளக்கினார். பில்கிஸ் பானுவின் வழக்கு குற்ற வாளிகளை, நன்னடத்தையின் அடிப்படையில் நீதிமன்றம் விடு வித்ததை வெறுப்பு அரசியலோடு சேர்த்து பார்க்க வேண்டும் என்றார்.
இந்த நிகழ்வில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆ.ராதிகா உள்ளிட்டு 17 அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.