tamilnadu

img

பால்கனி இடிந்து விழுந்து வாலிபர் மரணம் பட்டினப்பாக்கத்தில் பொதுமக்கள் சாலை மறியல்

சென்னை, டிச. 5 - பட்டினப்பாக்கத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய கட்டி டத்தின் பால்கனி இடிந்து விழுந்து வாலி பர் உயிரிழந்தார்.

சென்னை பட்டினப்பாக்கம் சீனி வாசபுரம் நகர்ப்புற வாழ்விட மேம் பாட்டு வாரிய குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்புகள் கட்டப்பட்டு 60 ஆண்டுகளாகிறது. கடற்கரையோரம் உள்ள இந்த குடியிருப்பு அவ்வப் போது இடிந்து விழுந்து விபத்து ஏற்படு வது தொடர்கதையாக உள்ளது.

இந்த நிலையில், அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 134வது பிளாக்கில் வசித்து வருபவர் சையது சிலான். இவரது மகன் சையது குலாம் (வயது 23) தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்தார். பணி முடிந்து புதனன்று (டிச.4) இரவு வீட்டிற்கு வந்த அவர் மீது 4வது மாடி யின் பால்கனி இடிந்து விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை  பலனின்றி குலாம் இறந்தார்.

இதனையடுத்து அப்பகுதி மக்கள் பட்டினப்பாக்கம் சாலை சந்திப்பில் வியாழனன்று (டிச.5) மறியலில் ஈடுபட்ட னர். புதிய வீடு கட்டித்தர வேண்டும், உயிரிழந்த குலாம் குடும்பத்திற்கு  உரிய  நிவாரணம் வழங்கவேண்டும், என்று கோரி போராட்டத்தில் முழக்க மிட்டனர். இந்தப்போராட்டத்தால் பல அடையாறு சந்திப்பு வரை பல மணிநேரம் போக்குவரத்து ஸ்தம்பித் தது.

டிச.9 கணக்கெடுப்பு

இதனையடுத்து மயிலாப்பூர் சட்ட மன்ற உறுப்பினர் அப்பகுதி மக்க ளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சீனிவாசபுரம் பகுதியில் உள்ள வாரிய குடியிருப்பை இடித்துவிட்டு புதிதாக கட்ட அரசு முயற்சித்து வரு கிறது. ஆனால் கணக்கெடுப்பு நடத்த  அங்குள்ளவர்கள் அனுமதிக்க மறுக் கின்றனர்.

குலாம் குடும்பத்தினர்  வலியுறுத்திய கோரிக்கைகளுக்கு உறுதி கூறியுள்ளோம். டிச.9ந் தேதி முதல் குடியிருப்புகளை கணக் கெடுக்கும் பணி நடைபெறும்” என்றார். இதனையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

நிவாரணம்

இது தொடர்பாக அறிக்கை வெளி யிட்டுள்ள அமைச்சர் தா.மோ.அன்பர சன், சையத் குலாப் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். 1965-1977 காலக்கட்டத்தில் கட்டப்பட்ட ஆயிரத்தி 356 குடியிருப்புகளை மறுக்கட்டுமானம் செய்ய 2020ல் நோட்டீஸ் வழங்கப்பட்டது. குடியிருப் புகளை காலி செய்ய மக்கள் மறுத்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

குடியிருப்புகளை புதுப்பித்து கட்ட வேண்டும் : சிபிஎம் 

“மக்கள் வாழ தகுதியற்றதாக வாரிய குடியிருப்பு உள்ளது. அங்கு தொடர் விபத்துக்கள் நிகழ்ந்தபடியே உள்ளது. இங்குள்ள குடியிருப் புகளை முற்றிலுமாக இடித்துவிட்டு, புதுப்பித்துக் கட்டித்தர வேண்டுமென்று சிபிஎம் சார்பில் வாரிய அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளது. இதனை வலியுறுத்தி பிரச்சாரத்தையும், போராட்டத்தையும் நடத்தி யது. ஆனால், இதில் அரசு நிர்வாகம் போதிய அக்கறை காட்ட வில்லை. இதன் விளைவாக வீடு இடிந்து விழுந்து உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.

காலநிலை மாற்றத்தால் கடும் மழை பொழிவு உள்ளதால் அரசு விரைந்து செயல்பட்டு மக்களை பாதுகாப்பான இடத்தில் மறு குடியமர்வு செய்ய வேண்டும். பழுதடைந்த குடியிருப்புகளை இடித்து விட்டு புதிய வீடு களை கட்டித்தர வேண்டும். குலாம் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் ரூபாய் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் வலியுறுத்தி உள்ளார்.