tamilnadu

img

மருத்துவ கல்லூரியில் துர்நாற்றம் வீசும் கழிவறை

விழுப்புரம், ஜூலை 4- விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கத் தில் உள்ள மருத்துவக் கல்லூரி வளாகத் தில் சுகாதாரத்து கிடையே துர்நாற்றம் வீசும் கழிவறை சுத்தப்படுத்தப்படுமா என பொது மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கத் தில் உள்ளது விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை.

இங்கு  தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள்  மருத்துவத்திற்காக வந்து செல்கின்றனர், மேலும் நோயாளிகள் பலர் மருத்துவமனை யில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அங்கு நோயாளிகளை அழைத்து வரும் உறவினர்கள், பார்வை யாளர்கள் காலைக்கடன்களை கழிப்பதற் காக புறக்காவல் நிலையம் பின்புறம் செயல்பட்டு வந்த கட்டண கழிவறையை பயன்படுத்திவந்தனர். தற்போது அந்த கழிவறை பராமரிப்பின்றி  துர்நாற்றம் வீசி வருகிறது, அதனை மருத்துவ கல்லூரி நிர்வாகம் கண்டு கொள்ளா மல் இருந்து வருகிறது.

அதன் அருகே புறக் காவல் நிலையம், இளைப்பாறும் தங்கும் கூடம் மற்றும் ஆவின் பாலகம் ஆகியன  இயங்கி வருகிறது. அங்கு வரும் பொது மக்கள் தூர் நாற்றம் தாங்காமல் மூக்கை பிடித்து கொண்டு கடந்துசெல்கின்றனர். நோய்தீக்கும் மருத்துவமனை நோய்ப் பரப்பும் மரணக்கூடமாக மாறிவருவதாக புகார் எழுந்துள்ளது. உடனடியாக மருத்துவக் கல்லூரி நிர்வாகம் அந்த கழிவறையை சரிசெய்து, பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என பொது மக்கள் மத்தியில் கோரிக்கை கள் வலுத்து வருகிறது.