tamilnadu

img

நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு கொடுக்கும் மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் வியாழனன்று (ஜூலை 2) எண்ணூர் அனல்மின் நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் கிளை செயலாளர் கே.வெங்கட்டையா தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், கிளைத் தலைவர் வெங்கடேசன், கணக்காயர் கள தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ஜோ.பெர்னாண்டஸ், கே.தேசிங், தொமுச நிர்வாகிகள் பியார்ஜான், ஆனந்தன் உள்ளிட்டோர் பேசினர்.

;