சென்னை, டிச. 7 - சட்டமன்றத்தில் போக்கு வரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை எம்எல்ஏக்கள் எழுப்ப வேண்டுமென வலியுறுத்தி தொழிலாளர்கள் மனு அளித்துவருகின்றனர்.
15வது ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து பேசி முடிக்க வேண்டும், 1.9.2023 முதல் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், 2023 ஏப்ரல் மாதம் முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள பணப்பலன்களை வழங்க வேண்டும், ஓய்வு பெறும்போதே ஓய்வுக்கால பணப்பலன் கள் வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர்க ளுக்கு 107 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். ஓய்வு பெற்றோருக்கு மருத்துவக் காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும், 1.4.2003 க்கு பின் பணி யில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலி யுறுத்தி டிச.12 அன்று மாநிலம் முழுவதும் தமிழ்நாடு அரசு போக்கு வரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெறுகிறது.
இதன் ஒருபதியாக பல்லவன் இல்லம் முன்பும் போராட்டம் நடைபெறுகிறது. இந்த நிலையில் டிச.9-10 தேதிகளில் தமிழ்நாடு சட்டமன்றம் கூடுகிறது. இந்தக்கூட்டத்தில், போக்கு வரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்துமாறு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து தொழிற்சங்கத் நிர்வாகிகள் சந்தித்து மனு அளித்து வருகின்றனர்.
சென்னையில் அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத் தலைவர்கள் சிறு, குறு, நடுத்தரத் தொழில் கள்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சிறு பான்மையினர் துறை அமைச்சர் சா.மு.நாசர், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா (தாம்பரம்), இ.கருணாநிதி (பல்லாவரம்), ஹசன் மௌலானா (வேளச்சேரி), த.வேலு (மயிலாப்பூர்), ஜெ.கருணாநிதி (தி.நகர்), ஏ.எம்.வி.பிரபாகரராஜா (விருகம்பாக்கம்), கே.பி.சங்கர் (திருவொற்றியூர்), எபிநேசர் (ஆர்.கே.நகர்), சுதர்சனம் (மாதவரம்) ஆர்.டி.சேகர் (பெரம்பூர்) ஜோசப் சாமுவேல் (அம்பத்தூர்) உள்ளிட்டோரிடம் மனு அளித்தனர்.