tamilnadu

img

வேங்கைவயலில் ஒரு நபர் ஆணையம் விசாரணை

வேங்கைவயலில் ஒரு நபர் ஆணையம் மே 6 ஆம் தேதி நேரில் சென்று விசாரணை நடத்தவுள்ளது.


 புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர்த்தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை உயர் நீதிமன்றம் அமைத்தது.
இந்த ஒரு நபர் ஆணையத்தின் சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி சத்யநாராயணன் மே 6 ஆம் தேதி வேங்கைவயலுக்கு சென்று நேரடியாக விசாரணையை தொடங்க உள்ளார்