tamilnadu

img

திருமழிசை அருகே குடோனில் தீ விபத்து: ரூ.1.5 கோடி சேதம்

சென்னை, ஜூன் 10- சென்னை திருமழிசையை அடுத்த கோலப்பன் சேரி பகுதியில் தனியாருக்கு சொந்தமான குடோனில் ஞாயிறன்று தீ விபத்து ஏற்பட்டது.

திடீரென ஏற்பட்ட இந்த தீ விபத்தில் அங்கு தங்கி இருந்த ஊழியர்கள் அலறி யடித்தபடி வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பூந்தமல்லியில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் அருகே இருந்த மற்றொரு  சோப்பு ஆயில் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வைத்திருந்த குடோன்களில் தீ  பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும்  புகை மண்டலமாக காட்சி அளித்தது.

இதைத்தொடர்ந்து ஜேசிபி இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். தீயணைப்பு வாகனங்களில் தண்ணீரை நிரப்ப கூடுதலாக 50-க்கும்  மேற்பட்ட தண்ணீர் லாரிகள் வரவழைக் கப்பட்டது. சுமார் 6 மணி நேரம் போராடி நள்ளிரவில் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர்.

இந்த தீ விபத்தில் சுமார் ரூ.1.5 கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானதாக தகவல் வெளியாகி உள்ளது. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்ட தாக கூறப்படுகிறது. தீ விபத்துக்கு வேறு  ஏதேனும் காரணம் உள்ளதா என வெள்ள வேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.