சென்னை, பிப். 20- வங்கதேசத்தை சேர்ந்த 12 வயது சிறுவனுக்கு பின்புற கழுத்தின் முழுப் பகுதியையும் உள்ளடக்கிய 15 செ.மீ. நீளம், அக லம் மற்றும் 20 செ.மீ. ஆழமுள்ள பெரிய நரம்பு உறை கட்டி இருப் பது கண்டறியப்பட்டு பெரும் பாக்கம் கிளெனீகிள்ஸ் குளோ பல் ஹெல்த் சிட்டி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ நிபுணர்கள் குழு இடைவிடாது தொடர்ந்து 12 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து அந்த கட்டியை அகற்றியுள்ளது. அந்த கட்டியானது கழுத்து மற்றும் மார்பு பகுதியின் இடது பக்கமாக தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வந்ததால், அந்த சிறு வனின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. அந்த சிறுவனுக்கு கட்டியானது கழுத்துப் பகுதி முதுகெலும்பில் பின்னோக்கி வளர்ந்திருந்தது. இதன் காரண மாக அவன் கடந்த 2 ஆண்டு களாக வலியால் மிகவும் அவதிப் பட்டு வந்திருக்கிறான். அந்த கட்டி யானது கழுத்தின் கீழ் பகுதியில் உள்ள எலும்புகளை முற்றிலுமாக அழித்துவிட்டிருந்தது. மேலும் கழுத்தின் இடது பக்கத்தில் உள்ள பெரிய ரத்த நாளங்களும் ரத்த ஓட்டம் இல்லாமல் தடைபட்டி ருந்தது பரிசோதனையில் தெரிய வந்தது என்று நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் நைகல் சிம்ஸ் கூறினார். இவரது தலைமையில், முது கெலும்பு அறுவை சிகிச்சை மூத்த ஆலோசகர் டாக்டர் பானிகிரண், ரத்த நாள அறுவை சிகிச்சை மூத்த ஆலோசகர் டாக்டர் ராஜ்குமார், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் ஜெகன்நாத், டாக்டர் அருள் மற்றும் நரம்பியல் மயக்கவியல் மற்றும் பராமரிப்பு நிபுணர் டாக்டர் ரமணா ஆகியோ ரைக் கொண்ட குழு, அந்த சிறு வனை முழுமையாக பரிசோ தனை செய்து அந்த கட்டியை ஒரு முறை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி உயிரை காப்பாற்றி யுள்ளது.