tamilnadu

img

பிளஸ் 2 தேர்வில் 94.03% மாணவர்கள் தேர்ச்சி!

பிளஸ் 2 பொதுத்தேர்வில்,  94.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ் 2 தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளார். மாணவிகள் 96.38%, மாணவர்கள் 91.45% தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசுப் பள்ளிகளில் 89.80% பேரும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 95.99% பேரும், தனியார் சுயநிதி பள்ளிகளில் 99.08% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூன் 19 இல் துணைத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர், திருப்பூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்கள் முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளன.
இத்தேர்வில், தமிழ் 2 பேரும், ஆங்கிலம் பாடத்தில் 15 பேரும், கணிதத்தில் 690 பேரும், இயற்பியல் பாடத்தில் 812 பேரும், வேதியியல் பாடத்தில் 3909 பேரும், உயிரியல் பாடத்தில் 1494 பேரும், தாவரவியல் பாடத்தில் 340 பேரும், விலங்கியல் பாடத்தில் 15 பேரும், வணிகவியல் பாடத்தில் 5,678 பேரும், பொருளியல் பாடத்தில் 1760 பேரும், கணக்குப் பதவியல் பாடத்தில் 6573 பேரும், கணினி அறிவியல் பாடத்தில் 4,618 பேரும், கணினி பயன்பாடுகளில் 4,051 பேரும், 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.