tamilnadu

img

சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு

சென்னை,ஜன.7- சென்னையில் இரண்டு நாட்கள் நடை பெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் துவக்கமாக  ரூ.86 ஆயிரம் கோடிக்கு புரிந்து ணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப் பட்டன. 2030ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாடு ஒரு  டிரில்லியன் டாலர் பொருளாதார முன்னேற்றத் தை பெற்றிருக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

அதற்கேற்ற வகையில் தொழில் முதலீடு களை ஈர்க்க கடந்த 2 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

உலக அளவில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, தமிழ்நாடு அரசு நடத்தும்  உலக முதலீட்டாளர்கள் 3 வது மாநாட்டினை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.7)   முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து தமிழ்நாட்டில் நிலவும் தொழில் சூழல் குறித்து எடுத்துரைத்தார்.

வாருங்கள் முதலீடு செய்யுங்கள்!
“தலைமைத்துவம், நீடித்த நிலைத் தன்மை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற கருப்பொருள்களில்  இந்த  மாநாடு நடத்தப்படுகிறது. தொழில்மய மாக்கல் வரலாற்றில் ஒரு மகத்தான அத்தி யாயமாக இந்த மாநாடு அமைந்திருக்கிறது. முதலீட்டாளர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்து வருகிறோம்.

எனவே, தமிழ்நாட்டில் முதலீடு செய்யுங்கள் அனை வரும் சேர்ந்து எதிர்காலத்தை பகிர்ந்து கொள்வோம் வாருங்கள் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கனவை நனவாக்குவோம் வாருங்கள்” என்று முதலமைச்சர் அழைப்பு விடுத்தார். விழாவில் பேசிய தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, “தொழில்துறையில் தமிழ்நாடு முன்னிலை யில் உள்ளது. இந்தியாவில் வாகன உற்பத்தி துறையில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. ஏற்றுமதிக்கான குறியீட்டு எண்ணில் தமிழ்நாடு முத லிடத்தில் உள்ளது. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மிகவும் பாது காப்பான மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாட்டில் 230 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதத்தில் உள்ளோம். தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளும் சீராக வளர வேண்டும் என்பது முதல்வரின் இலக்கு” என்றார்.

கொள்கை-செயல் திட்ட அறிக்கை
இம்மாநாட்டில், தமிழ்நாடு குறைக் கடத்தி மற்றும் மேம்பட்ட மின்னணுக் கொள்கை-2024 மற்றும் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் இலக்கினை எய்துவதற்கு செயல் திட்ட அறிக்கை ஆகியவற்றை முதலமைச்சர் வெளியிட்டார்.

அடிக்கல்
மாநாட்டின் துவக்க நாள் நிகழ்ச்சியில், குவால்காம் டிசைன் சென்டர் மற்றும் பர்ஸ்ட் சோலர் நிறு வனங்களின் திட்டங்களை தொடங்கி வைத்தும், கோத்ரெஜ் நிறுவனத்தின் திட்டத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இந்த மாநாட்டில் ஜவுளி, காலணி தொழில்கள், மின்சார வாகனங்கள் மற்றும் வேளாண் தொழில்­நுட்பங்­கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் அடிப்படை யில் அமர்வுகள் நடைபெற்று வருகின்றன. தொடக்க விழா நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஒன்றிய அரசின் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜல்லி க்கட்டு காளை நினைவு பரிசாக வழங்கினார்.

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா நன்றி கூறினார்.  இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டின் அதிகாரப்பூர்வ பங்குதாரர் நாடுகளாக சிங்கப்பூர், கொரியா, இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, டென்மார்க், அமெரிக்கா ஆகிய 9 நாடுகள் பங்கேற்றுள்ளன. மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் தைவான் பொருளாதார மற்றும் கலாச்சார நிறு வனங்களும் இதில் இணைந்துள் ளது.

26 அமர்வுகளில் 170-க்கும் மேற்பட்ட உலக புகழ் வாய்ந்த பேச்சாளர்கள் பங்கேற்றுள்ளனர்.