சென்னையில் போதை பொருட்களை விற்ற 84 பேர் கைது
சென்னை, மார்ச் 4- சென்னையில் போதைப் பாக்கு விற்றதாக ஒரு வாரத்தில் 84 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக ‘‘புகை யிலை பொருட்கள் ஒழிப்புக் கான நடவடிக்கை” என்ற பெயரில் சிறப்பு நடவடிக் கையை காவல் ஆணை யர் சந்தீப் ராய்ரத்தோர் மேற்கொண்டுள்ளார். அதன்படி,அனைத்து காவல் நிலைய ஆய்வாளர் கள் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டுள் ளது. தனிப்படை காவல் துறையினர் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணி யில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த 26ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை 7 நாட்களில் சென்னையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கடத்தி வரு தல்,பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர் பாக 73 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 78 கிலோ குட்கா, 71 கிலோ மாவா ஆகியவை பறிமுதல் செய்ய ப்பட்டுள்ளன. போதைப் பாக்கு விற்பனைக்கு பயன்படுத்திய 3 இரு சக்கர வாகனங்கள், ஒரு ஆட்டோ, ஒரு கைப்பேசி ஆகியவையும் கைப்பற்றப் பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சென்னை கணித நிறுவனத்தில்
மாணவர் சேர்க்கை
சென்னை, மார்ச் 4 - சென்னை கணித நிறு வனத்தில், கணிதம், கணினி அறிவியல் மற்றும் இயற்பி யல் பாடப்பிரிவுகளில் இளங் கலை மற்றும் முதுகலை பிரிவுகளில் சேர்க்கை தொடங்க உள்ளது. இதற் கான விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகிறது.
இதன்படி மார்ச் 4ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். ஏப்.15 தேதி விண்ணப்பிக்க இறுதி நாளாகும். மே 19ந் தேதி நுழைவு தேர்வு நடை பெறும். மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் மாதத்தில் நடை பெறும். கூடுதல் விவரங் களுக்கு https://www.cmi.ac.in/admissions/ என்ற இணையதளத்தை அணு கவும்.