tamilnadu

இளம் பெண் உறுப்புகள் தானம் சிறுமி உட்பட 8 பேருக்கு மறுவாழ்வு

சென்னை,ஏப்.21ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்தவர் துளசிராம். ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி வானிசிறீ (23). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. சிலவாரங்களுக்கு முன்பு தலைவலியால் அவதிப்பட்ட வானிசிறீ, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இதையடுத்து, மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் கடந்த வெள்ளியன்று இரவு அவர் மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்புவதாக உறவினர்கள் தெரிவித்தனர்.இதனைத் தொடர்ந்து டாக்டர்கள் குழுவினர் அறுவைச் சிகிச்சை செய்துஅவரது உடலில் இருந்துஉறுப்புகளை எடுத்தனர். சென்னை அடையாறு ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 12 வயது சிறுமிக்கு வானியின் இதயம் பொருத்தப்பட்டது. சிறுநீரகங்கள், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் சென்னை அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது. இதனால் 8 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.



;