tamilnadu

img

8 மண்டல துப்புரவு பணியை தனியார் மயமாக்குவதை கைவிடுக

சென்னை, ஜூன் 30 - 8 மண்டலங்களில் துப்புரவு பணி தனியார்மயமாக்குவதை கைவிட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கம் வலியுறுத்தி உள்ளது. செங்கொடி சங்கத்தின் 51வது ஆண்டு பேரவை ஞாயிறன்று (ஜூன் 30) போரூரில் நடைபெற்றது. இந்த பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: ஊழலுக்கும் நிர்வாக சீர்கேட்டிற்கும் வழிவகுக்கும், மக்களின் சுகாதாரத்தை கேள்விக் குறியாக்கும் வகையில் 8 மண்டலங்களில் துப்புரவு பணி தனியார்மயமாக்கும் நடவடிக்கை களை கைவிட வேண்டும். துப்புரவுப் பணியில் காலியாக உள்ள இடங்க ளில் எம்எம்ஆர், என்யுஎல்எம், தொகுப்பூதியம், தற்காலிகம், ஒப்பந்தம், சுவர்ண ஜெயந்தி பணியாளர்களை கொண்டு நிரப்ப வேண்டும். துப்புரவு உள்ளிட்ட பணிகளை மாநகராட்சி நிர்வாகமே நடத்த வேண்டும். மாநகராட்சி விரிவாக்கத்திற்கு ஏற்ப 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் பணி யாற்ற வேண்டும். எனவே, காலிப் பணியிடங்களை நிரப்பவும், புதிய ஊழியர்களை நியமனம் செய்ய வும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி மாநகராட்சி அனைத்து துறை தொழிலாளர்களுக்கும் குடியிருப்பு வசதி ஏற்படுத்த வேண்டும். அனைத்து கோட்டங்கள், லாரி நிலையங்களில் அடிப்படை வசதிகளுடன் ஓய்வறை அமைக்க வேண்டும், 2015 பிப்ரவரி மாதம் மாமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் என்எம்ஆர் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மேலும் ஓய்வு பெறும் என்எம்ஆர் தொழிலாளர்களுக்கு பணிக் கொடை தர வேண்டும். தற்காலிக தொகுப்பூதிய தொழி லாளர்களின் பணிக் காலத்தை கணக்கில் கொண்டு அவர்களை பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்க வேண்டும். அனைத்து துறை களிலும் ஒப்பந்தம், அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும். என்யுஎல்எம் தொழிலாளர்களுக்கு மாதம் முழுவதும் வேலை வழங்க வேண்டும்; முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

துப்புரவு பணி செய்யும் அனைத்து வகையான தொழி லாளர்களுக்கும் அரசின் அரசாணைப்படி குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும், தற்காலிக, பகுதிநேர ஒப்பந்த மற்றும் சொர்ணஜெயந்தி திட்ட தொழி லாளர்களுக்கு 18ஆயிரம் ரூபாய் ஊதியம் தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டிற்கு சங்கத்தின் தலைவர் எல். சுந்தரராஜன் தலைமை தாங்கினார். 13வது மண்டலச் செயலாளர் கொடியேற்றினார். துணைப் பொதுச் செயலாளர் கே.தேவராஜ் வரவேற்றார். அஞ்சலி தீர்மானத்தை ஜெ. சிவக்குமார் வாசித்தார். பேரவையை தொடங்கி வைத்து சிஐடியு வடசென்னை மாவட்டச் செயலாளர் சி. திருவேட்டை பேசினார். வேலை அறிக்கையை பொதுச் செயலாளர் பி. சீனிவாசலுவும், வரவு செலவு அறிக்கையை பொருளாளர் பா. ராஜேந்திரனும் சமர்ப்பித்தனர். உள்ளாட்சி ஊழியர் சம்மேளனத் தலைவர் நா. பாலசுப்பிரமணியம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலப் பொருளாளர் தங்கராஜ், சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா. பாலகிருஷ்ணன், துணைத் தலைவர் க. பீம்ராவ் உள்ளிட்டோர் பேசினர். சிஐடியு வடசென்னை மாவட்டத் தலைவர் எஸ்.கே. மகேந்திரன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். துணைச் செயலாளர் ஏ. வெங்கடேசன் நன்றி கூறினார். பேரவையில் சங்க முன்னோடிகள் கவுரவிக்கப்பட்டனர்.

நிர்வாகிகள்

சங்கத்தின் தலைவராக எஸ்.கே. மகேந்திரன், பொதுச் செயலாளராக பி. சீனிவாசலு, பொருளாளராக பா. ராஜேந்திரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.