சென்னை,செப்.7- இந்திய கட்டுநர்கள் சங்கம் சார்பில் சென்னை வர்த்தக மையத்தில் நடை பெற்ற வீடு, மனை கண்காட்சியை தமிழக குறு, சிறு, நடுத்தர தொழில்கள்-நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர் பேசுகையில், ஒன்றிய அரசு வழங்கும் ரூ.1.50 லட்சம், மறுகுடி யமர்வு செய்யப்படுபவர்களிடம் இருந்து பெறப்படும் ரூ.1.50 லட்சம் என தமிழக அரசுக்கு ரூ.3 லட்சம் மட்டுமே கிடைக்கும். இதை தவிர சாலை,கழிவுநீர், குடிநீர் போன்றவற்றுக்கான செலவுகளை அரசே ஏற்றுக்கொள்ளும் என முதல்வர் அறி வித்தவகையில் ரூ.15 லட்சத்தை தமிழக அரசு தான் மானியமாக வழங்கு கிறது
1.43 லட்சம் அடுக்குமாடி குடியிருப்பு கள் கட்ட ஒன்றிய அரசிடம் அனுமதி பெற்றுள்ளோம். இதில் 57 ஆயிரத்து க்கும் மேற்பட்டவை கட்டி முடிக்கப் பட்டுள்ளன.
79 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடி யிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் விரைவில் கட்டப்படும். கடந்த 3 ஆண்டு களில் ரூ.3,248 கோடி மதிப்பீட்டில் 79,439 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு, 35,866 குடியிருப்புகளில் ஏழை, எளிய மக்கள் குடியமர்த்தப்பட் டுள்ளனர்.
இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் இத்தகைய பணிகளை அரசால் மட்டுமே செய்ய முடியாது. எனவே, கட்டுநர் சங்கங்களும் அரசுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும். ஜிஎஸ்டி 10 சதவீதம் பிடித்தம் செய்யும் பிரச்சனைக்கு ஓரிரு மாதங்களில் தீர்வு காணப்படும் என்று கூறினார்.