சென்னை:
தேர்தல் அறிக்கையில் நீட் தேர்விலிருந்து விலக்கு வாங்கி தரப்படும் எனக் கூறிவிட்டு, அதை தடுக்கக்கூடிய துணிச்சலோ, நடவடிக்கையோ அதிமுக அரசிடம் இல்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சாடினார்.அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக்கல்வியில் 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக் காமல் காலம் தாழ்த்தும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை கண்டித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கிண்டி ஆளுநர் மாளிகை முன் பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்தப் போராட்டத்தில் பொருளாளர், டி.ஆர்.பாலு, எம்.பி. கனிமொழி, எம்.எல்.ஏகள் சேகர் பாபு, மா.சுப்பிரமணியம், இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தொண்டர் கள் பங்கேற்றனர்.
ஆளுநரைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்ட பின் னர் மு.க. ஸ்டாலின் கண்டன உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “நீட் ஒரு அநீதி. கல்வியை கார்ப்பரேட் சென்டராக மாற்றக்கூடியது தான் நீட் நுழைவுத்தேர்வு. அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஜெயலலிதா இருக்கும் வரை நீட் நுழைய முடியவில்லை. முதலமைச்சர் பழனிசாமி அடிமையாக இருப்பதால் நீட் நுழைந்துள்ளது" என்றார்.நீட் தேர்விலிருந்து தமிழ் நாட்டிற்கு விலக்கு வேண்டும் என்ற கோரிக்கையை ஆளுநர் திருப்பி அனுப்பிய செய்தியை அதிமுக அரசு சொல்லவில்லை. நீதிமன்றம் மூலம் தான் தெரிய வந்தது. அதேபோல், தேர்தல் அறிக்கையில் நீட் தேர்விலிருந்து விலக்கு வாங்கி தரப்படும் எனக் கூறிவிட்டு, அதை தடுக்கக்கூடிய துணிச்சலோ, நடவடிக்கையோ அதிமுகவிடம் இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.திமுக ஆட்சிக்கு வந்தவுடன், சட்டரீதியாகவே நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படும்.இந்த மசோதா நிறைவேறி சட்டமாக வந்தால் 300 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவர்
ஆக முடியும். இல்லையென் றால் 8 பேர் தான் ஆக முடியும். இது எவ்வளவு பெரிய அநீதி.
7 பேர் விடுதலையிலும் இதேபோல் கால தாமதம் செய்யும் ஆளுநரின் தமிழர் விரோத போக்குகளை கண்டித்துதான், இவ்விவகாரத்தில் அதிமுக அரசுடன் இணைந்து போராட தயார் என்றேன். ஆனால், இதில் நான் அரசியல் செய்வதாக முதலமைச்சர் கூறுகிறார். இது முதல்கட்ட போராட்டம். இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரை திமுக தொடர்ந்து போராடும்.இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.