tamilnadu

img

7.70 லட்சம் பேர் கைதாகி விடுதலை

சென்னை:
தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 7,70,299 பேர் கைதாகி ஜாமினில் விடுவிக்கப் பட்டுள்ளனர்.கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த உத்தரவை மீறி தேவை இல்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அவர் கள் சென்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.

தமிழகம் முழுவதும், 7 லட்சத்து 70 ஆயிரத்து 299 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப் பட்டுள்ளனர். மேலும் 7 லட்சத்து 04 ஆயிரத்து 057 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளது. 5 லட்சத்து 78 ஆயிரத்து 854 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.16,19,27,405 அபராதம் வசூலிக்கப்பட்டதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

;