tamilnadu

img

வேலூர் அருகே விபத்தில் 7 பேர் பலி

வேலூர், மே 6-வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வெங் கிலி என்னும் இடத்தில், தேசிய நெடுஞ்சாலையில் நின்றிருந்த கண்டெய்னர் லாரி மீது பெங்களூரு நோக்கிச் சென்ற கார் மோதி விபத்துக் குள்ளானதில் காரில் பயணம் செய்த குழந்தை உட்பட ஏழு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியானார்கள். மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த குடும் பத்தினர் பெங்களூரு நோக்கி சென்றுகொண்டிருந்த போது நிகழ்ந்த இந்த விபத் தில், கார் அப்பளம்போல் நொறுங்கியது. இதனால், வாகனத்திலிருந்து உடல்களை வெளியில் எடுக்க மிகவும் போராடினர். பொது மக் கள், தீயணைப்பு வீரர்களின் நீண்ட நேரப் போராட் டத்திற்குப் பிறகு உடல்கள் மீட்டு, உடல் கூறு பரிசோதனைக்கு ஆம்பூர் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

;