tamilnadu

6 -ஆம் வகுப்பு முதல் இந்தி மொழி கட்டாயம் பாஜகவின் அடுத்த இடி

சென்னை, ஜூன் 1-6 ஆம் வகுப்பு முதல் தாய் மொழி, ஆங்கிலம் ஆகியவற்றோடு இந்தி மொழியைக் கற்பிக்க வேண்டும் என்ற கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைத்துள்ளது.மத்திய அரசு புதிய தேசிய கல்விக் கொள்கையின் வரைவு வெளியிட்டுள்ளது.  இதில் இந்தி பேசாத மாநிலங்களில், இந்தியைப் பயிற்று விக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள தேசிய கல்விக் கொள்கையானது 1986 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்டு, 1992 ஆம் ஆண்டு திருத்தப்பட்டது.2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப் படும் என்று பாஜக வாக்குறுதி கொடுத்திருந்தது. அதன்படி கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 9 பேர் கொண்ட நிபுணர்கள் குழு, அமைக்கப்பட்டது. அந்த குழு, தேசியக் கல்விக் கொள்கைக்கான வரைவை, புதிதாகப் பொறுப் பேற்றுக் கொண்ட மத்திய மனித வளம் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் நிஷாங்கிடம் மே 30 ஆம் தேதி ஒப்படைத்தது.அந்த வரைவில், தேசிய கல்வி ஆணையத்தை உருவாக்குவது, தனியார்ப் பள்ளிகளின் கட்டண உயர்வைத் தடுப்பது ஆகியவற்றுடன் இந்தி மொழி பேசாத மாநிலங்களில், இந்தியைப் பயிற்றுவிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  484 பக்கம் கொண்ட அந்த புதிய வரைவில், மும்மொழி கொள்கை என்பது கட்டாயம் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.அதன்படி, மாநிலங்களை, இந்தி மொழி பேசும் மாநிலங்கள், பேசாத மாநிலங்கள் என இருவகையாகப் பிரித்துள்ளனர். இந்தி பேசாத மாநிலங்களில், அந்த மாநில தாய்மொழி, ஆங்கிலம் ஆகியவற்றோடு இந்தி மொழியைக் கற்பிக்க வேண்டும். இந்த நடைமுறையை ஆறாம் வகுப்பிலிருந்து தொடங்க வேண் டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த கல்விக் கொள்கைக் கான வரைவு குறித்து பொது மக்கள், ஜூன் 30 ஆம் தேதி வரை தங்கள் கருத்துக்களை நேயீ.நனர@niஉ.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, கஸ்தூரி ரங்கன் குழுவின் சர்ச்சை பரிந்துரைகள் குறித்து கருத்து தெரிவித்த மத்திய அரசு, எந்த மொழியையும் கட்டாயமாக்க வேண்டும் என்று அக்குழு பரிந்துரைக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்திருந்தது. மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் சரஸ்வதி சிசு மந்திர் பள்ளியில் ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கி உத்தர்கண்ட் முதல்வராகப் பதவி வகித்தவர். தற்போது மத்திய கல்வி அமைச்சராகப் பதவி ஏற்ற உடனேயே புதிய கல்விக் கொள்கை பரிந்துரைகளை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.யோகா, நீர் மேலாண்மை, அரசியல் ஆகியவை குறித்தும் மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும் என்கிறது கஸ்தூரி ரங்கன் குழு. இக்குழுவின் பரிந்துரைகள் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளன. இருப்பினும் வரும் கல்வியாண்டிலேயே இந்த புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

;