tamilnadu

img

இரண்டே நாளில் ரூ.63 கோடி போதைப்பொருள் பறிமுதல்

சென்னை, ஏப். 25- கம்போடியாவில் இருந்து மலேசியா வழியாக சென்னைக்கு கடத்தப்பட்ட ரூ.35 கோடி மதிப்பி லான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம் பூரில் இருந்து, சென்னை சர்வதேச  விமான நிலையத்திற்கு வியாழனன்று காலை ஏர் ஏசியா பயணிகள் விமானம் ஒன்று வந்தது.

 அப்போது வழக்கம் போல் அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அந்த விமானத்தில் கம்போடியா நாட்டில் இருந்து மலேசியா வழியாக வந்த ஒரு  பயணியிடம் விசாரணை நடத்திய தில் அவர் பெயர் கிரீஸ் என்பதும் அவர் வைத்திருந்த பையில் சுமார்  3.5 கிலோ எடையுடைய போதைப் பொருள் இருந்ததும் தெரியவந்தது.

கொக்கைன் ரகத்தை சேர்ந்த இந்த போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.35 கோடி இருக்கும் என அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் கடத்தி வந்த இளைஞரை கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் புதனன்று ரூ.28 கோடி மதிப்பிலான கொக்கைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், வியாழக்கிழமை ரூ.35 கோடி  மதிப்பி லான போதைப்பொருள் பறிமுதல்  செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.