tamilnadu

img

தமிழகத்தில் மேலும் 5,609 பேருக்கு கொரோனா தொற்று...  ஒரே நாளில் 109 பேர் பலி... 

சென்னை 
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. எனினும் கடந்த 4 நாட்களாக தினசரி பாதிப்பு இறங்கு வரிசையில் பயணித்து வருகிறது. 

பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைத்தாலும் பலி எண்ணிக்கை மின்னல் வேகத்தில் எகிறி வரும் நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 5,609 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 2,63,222 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தின் கொரோனா பாதிப்பு வரலாற்றில் முதன்முறையாக ஒரே நாளில் 109 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,241 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தின் வெளிபகுதியில் இருந்து வந்த 32 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

மேலும் 5,800 பேர் குண்டமடைந்த நிலையில், தமிழகத்தில் கொரோனாவை வென்றவர்களின் மொத்த எண்ணிக்கை 2,02,283 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் சிகிச்சையில் 56,698 பேர் உள்ள்ளனர்.      
 

;