சென்னை, மார்ச் 4- சென்னை வருமான வரித்துறை சார்பில் 52-வது தென்மண்டல மத்திய வருவாய்த் துறை விளை யாட்டுப் போட்டிகள் சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் மார்ச் 2, 3 ஆகிய தேதிகளில் நடை பெற்றது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, கேரளா ஆகிய மாநிலங்க ளைச் சேர்ந்த வருமான வரித்துறை, ஜிஎஸ்டி வரித்துறை, மத்திய கலால் மற்றும் சுங்கத்துறைகள் சார்பில் 840 விளையாட்டு வீரர்கள், தடகளம், கால் பந்து, ஹாக்கி, கூடைப்பந்து, கபடி, வாலிபால், கிரிக் கெட், காண்ட்ராக்ட் பிரிட்ஜ், சதுரங்கம், கேரம், டென்னிஸ், டேபிள் டென் னிஸ், உடற்கட்டு, நீச்சல், பேட்மிண்டன், ஸ்குவாஷ், பில்லியர்ட்ஸ், ஸ்னூக்கர் ஆகிய 17 விதமான விளை யாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் கொல்கத்தா வில் வரும் 19 முதல் 21 ஆம் தேதிவரை நடைபெறவுள்ள தேசிய மத்திய வருவாய்த் துறை விளையாட்டுப் போட்டி களில் கலந்து கொள்வார் கள். விளையாட்டுப் போட்டி களின் நிறைவு விழா செவ்வாயன்று (மார்ச் 3) நடைபெற்றது. சென்னை வருமான வரித்துறை தலைமை இயக்குனர் தினேஷ் சி.பட்வாரி, வரு மான வரி-1 பிரிவின் தலைமை ஆணையர் அரவிந்த்குமார் ஆகியோர் தலைமை விருந்தினர்களாக கலந்து கொண்டனர். பாட்டியாலாவில் உள்ள தேசிய விளையாட்டு நிறுவனத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் பயிற்சி யாளர் துரோணாச்சாரியா விருது பெற்ற . ஏ. ஸ்ரீநிவாச ராவ், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். சென்னை வருமான வரித்துறையின் அதிகாரி யும், விளையாட்டுப் போட்டி களுக்கான அதிகாரியுமான பி.பாலச்சந்திரன், அறிக்கை தாக்கல் செய்தார். தலைமை விருந்தினர்கள் தினேஷ் சி.பட்வாரி, அரவிந்த்குமார் ஆகியோர் உரையாற்றி னார்கள். விளையாட்டுப் போட்டி யின் ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறை வென்றது. போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.