சென்னை, ஜூன் 23 - சிறார் எழுத்தாளர் விழி யனின் 50வது நூல் வெளி யீட்டு விழா ஞாயிறன்று (ஜூன் 23) அண்ணா நூற்றா ண்டு நூலரங்கில் நடை பெற்றது.
விழியனின் 49வது படை ப்பான ‘அபூர்வமழை நின்றதா?’ என்ற நூலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் வெளி யிட, அமீரக எழுத்தாளர் ஆசிஷ் மீரான் பெற்றுக் கொண்டார்.
50வது படைப்பான கணித கட்டுரைகளை கொண்ட ‘தேன்கணி’ நூலை ஜி.ராமகிருஷ்ணன் வெளி யிட, குப்பு, பரிமளா ஆகி யோர் பெற்றுக் கொண்ட னர். இந்த நூலை அறிமுகம் செய்து ஆசிரியர் மோகனா அறிமுகம் செய்ய, தாய் தமிழ்ப்பள்ளி சேர்ந்த வெற்றிச்செழியன் வாழ்த் துரை வழங்கினார்.
இந்நிகழ்வில் பேசிய ஜி.ராமகிருஷ்ணன், விழிய னின் முதல் படைப்பான ‘தோழியே உன்னை தேடு கிறேன்’ என்ற நூலை வெளி யிட்டேன். அதனால் அவரின் 50வது நூலையும் வெளியிட அழைக்கப்பட்டுள்ளேன். விழியனின் 4 நூல்கள் விருதுகளை பெற்றுள்ளது. அவரின் ‘மலைப்பூ’ என்ற நூலை இயக்குநர் வெற்றி மாறன் திரைப்படமாக்க யோசித்து வருவதாக கூறி னார்.
வாரந்தோறும் ஞாயிற்று கிழமைகளில் அதிகாலை யில் குழந்தைகளுக்கு இணையவழியில் கணக்கு வகுப்பு எடுத்து வந்தார். அதன் தொடர்ச்சியாக இந்த நூல் வந்துள்ளது என்று குறிப்பிட்ட அவர், ஆயிஷா நடராஜன், விழியன் போன்றோரது நூல்களை வெளியிடுவதில் பாரதி புத்தகாலயம் பெருமை கொள்கிறது. இந்த நூல் குழந்தைகளுக்கான புத்தகமாக இருந்தாலும், பெரியவர்களும் வாசிக்கக்கூடியதுதான் என்றார்.
விழியன்
ஏற்புரையாற்றிய விழியன், “அடிப்படை கணி தத்தை கற்பிப்பதில் பின் தங்கியுள்ளோம். எண்ண றிவு, எழுத்தறிவு என்பதை தாண்டி இன்னும் பல கட்டங்கள் உள்ளது. அதை நோக்கிச் செல்ல வேண்டும். கணிதத்தை உரையாடலாக கற்பிக்க வேண்டும். குழந்தை ஒரு கதையை புறக்கணிக்கிறது என்றால் அதை தூக்கி எறியும் போது தான் வளமான படைப்பு களை உருவாக்க முடியும்” என்றார்.
‘களத்திலும் இணைந்து நிற்கும் குடும்பங்கள்’ என்ற அமர்வில், குடும்பமாக சமூகப் பணியாற்றி வரும் 10க்கும் மேற்பட்ட இணை யர்களை ஜி.ராமகிருஷ் ணன், விஞ்ஞானி தா.வீ.வெங்கடேஸ்வரன் ஆகி யோர் கவுரவித்தனர்.
இதனைத் தொடர்ந்து விழியனின் தந்தையும், தமிழ்நாடு அறிவியல் இயக்க செயற்பாட்டாளருமான கு.தமிழ்ச்செல்வன்-குண சுந்தரி தங்களது இயக்க, வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
முன்னதாக ரஞ்சனா குழலி வரவேற்க, கனிவ முதன் பாடல்களோடு தொடங்கிய இந்த நிகழ்வை பிரியதர்ஷினி ஒருங்கி ணைத்தார். நிகழ்வின் மையப் பொருளை எழுத் தாளர் விஷ்ணுபுரம் சர வணன் விளக்கினார்.
“புற்றீசல் போல் குழந்தை இலக்கியங்கள் வருகின்றன. எதிரிகள் கண்டதை விதைக்கிறார்கள் என்பதற்காக அதை தடுக்க ஏராளமாக எழுதுகிறார்கள். குழந்தைகள் இலக்கியம் குழந்தைகளை சிந்திக்க தூண்ட வேண்டும். சிறு துடுப்பு அசைவது போன்றதாக அது இருக்க வேண்டும். மாறாக, அவர்களின் பயணத்தை நீங்கள் செய்யக்கூடாது. தேன்கணி புத்தகம் துறைசார்ந்த அறிவோடு வந்துள்ளது” என்று விழாவை வாழ்த்தி பேசிய எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் கூறினார்.