கிருஷ்ணகிரி, ஜூலை 10- ஓசூரில் 8ஆவது “புத்தகத் திரு விழா ஜூலை 12ஆம் தேதி துவங்கி 23ஆம் தேதி வரை 12 நாட்கள் நடை பெற உள்ளது. தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் ஓசூர் அனைத்து குடி யிருப்போர் நலசங்கமும் இணைந்து பெருமாள் மணிமேகலை பாலி டெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரி உதவியுடன் இந்த புத்தக திருவிழாவை நடத்துகின்றனர். இதையொட்டி பொறியியல் கல் லூரியில் “புத்தகங்களை வாசிப் போம், நேசிப்போம்” நிகழ்ச்சி புத னன்று (ஜூலை 10) நடைபெற்றது. இதில் 5000 மாணவர்கள் ஒரு மணி நேரம் புத்தக வாசிப்பில் ஈடுபட்ட னர். நிகழ்ச்சியில் பேராசிரியர் முத்துக் குமார், கல்லூரி மக்கள் தொடர்பு அதி காரி விஜயகுமார், விழாச் செயலா ளர் பாலகிருஷ்ணன், பாலிடெக்னிக் இயக்குனர் சுதாகர், முதல்வர் சித்ரா, துணைத் தலைவர் சீனிவாசுலு, இணைச் செயலாளர் அரிச்சந்திரன் ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் தரமான தமிழ், ஆங்கிலம் புத்தகங்கள், சிடிக்கள், குழந்தைகளுக்கான அறிவியல் விளையாட்டுப் பொருட்கள், இயற்கை உணவகங்கள் என 70 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு கோடி தலைப்புகளில் புத்த கங்கள் இடம்பெற உள்ளன. மக்கள் ஆரோக்கியம் மற்றும் விழிப்புணர்வுக்காக தீ இல்லா சமை யல் போட்டி, ஓவியப் போட்டி, சது ரங்கப் போட்டிகள், விஞ்ஞான விழிப்புணர்வுக்காக பார்வையிட கோளரங்கம், 2000 குழந்தைகள் தன் நண்பர்களுக்கு கடிதம் எழுது தல், 100 வீடுகளில் இந்த ஆண்டு இலவச நூலகம் அமைப்பது உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் இடம் பெருகின்றன. புத்தகத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் பிரபாகர் துவக்கி வைக்கி றார். கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினர் செல்லக்குமார், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் சத்யா, மாநக ராட்சி ஆணையாளர் பாலசுப்ர மணியம், தமுஎகச மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகி யோர் அரங்குகளை துவக்கி வைக்க உள்ளனர் என விழா செயலா ளர் பாலகிருஷ்ணன், ஒருங்கி ணைப்பாளர் சிவக்குமார் கூறி னார்கள்.